திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

0 723

கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காளப்பட்டி அருகே உள்ள தனது பண்ணை வீட்டிற்கு புதன் இரவு இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற பையா கவுண்டர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவரது உடலுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சொத்துக்களை பிரித்து கொடுப்பது தொடர்பாக இருந்த குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவைத் தேடிக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments