ஆம்னி பேருந்துகள் இயக்க விதிக்கப்பட்ட தடையை அடுத்து கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் வெறிச்சோடியது

0 721

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் இருந்து இயக்க விதிக்கப்பட்ட தடையை அடுத்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.


பேருந்து நிலைய முகப்பில் இரும்பு தடுப்புகள் அமைத்து, 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பேருந்துகள் மட்டுமே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல், ECR சாலை மார்க்கமாகவும், ரெட்ஹில்ஸ் மார்க்கமாகவும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments