தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் மீதான புகார்... பணிப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை

0 867

பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்த பணிப் பெண்ணை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

உடல் ரீதியாக ஏற்பட்ட காயத்தை போலீசார் பதிவு செய்து மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல்லாவரம் எம்.எல்.ஏ. வீட்டில் புதனன்று 4 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக உள்ள தம்பதியை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments