நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி

0 688

மேற்கு வங்க மாநிலத்தில் இண்டியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதற்காக ஒரு மாதம் காத்திருந்தும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து உரிய பதில் வராமல் போனதால் தனித்து போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய அரசியல் பற்றி தமக்கு கவலையில்லை என்றும், மாநிலத்தில் பாஜகவை தோற்கடிப்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.

இதனிடேயே மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments