மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது..

0 673

ஜன் நாயக் என்றழைக்கப்படும் பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு அவர் மறைந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

சமூக நீதியின் கலங்கரை விளக்காக கர்பூரி விளங்கி வந்ததாகவும்,
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் அவரது நீடித்த முயற்சிகளுக்கு சான்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் ஓபிசி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய கர்பூரி, இரண்டு முறை அம்மாநிலத்தின்முதலமைச்சராக பணியாற்றி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments