மெக்சிகோ சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற நபரை சுட்டுக்கொலை..

0 785

மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள கடலோர நகர் ஒன்றில்,   சோதனைச் சாவடியில் போலீஸ் தடுத்தபோது காரை நிறுத்தாமல் 27 வயது இளைஞர் சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் அவரை விரட்டி சென்று சுட்டதில் கழுத்தில் காயமடைந்து சம்பவ  இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் கிடைத்த உள்ளூர் மக்கள், போலீசாரை கண்டித்து அரசு கட்டிடத்துக்கு தீ வைத்தனர்

காரில் சடலமாக கிடந்த இளைஞரை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

கூட்டம் திரண்டதால் சமாதானப்படுத்த சென்ற போலீசாரை, சுற்றி வளைத்து அவர்கள் தாக்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments