அமெரிக்ககடலில் மீன்பிடித்தபோது சிக்கிய ராட்சத ஆமை.. சிகிச்சை அளித்து கடலில் விட்ட மீனவர்கள்

0 798

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய 90 கிலோ எடையுள்ள ராட்சத ஆமைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கடலில் மீண்டும் விடப்பட்டது.

மாரத்தான் என்ற இடத்தை சேர்ந்த தம்பதி, கடலில் மீன்பிடித்தபோது அரிய வகையை சேர்ந்த கடல் ஆமை சிக்கியது.

இதன் உடலில் காயங்கள் இருந்ததால் அதனை தன்னார்வு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

தகவல் கிடைத்த கடலோர பாதுகாப்பு படையினர், ஆமைக்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, பின்னர் கடலில் பத்திரமாக  விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments