அமெரிக்காவின் போர் விமானம் மூலம் ஹவுதீஸ் பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு

0 730

ஏடன் வளைகுடா பகுதியில் செங்கடலில் சரக்குக் கப்பலைக் குறிவைத்து ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவிய ஏவுகணையை அமெரிக்கப் போர் விமானம் தாக்கி அழித்தது.

அமெரிக்காவின் தலைமையில் பன்னாட்டு படைகள் ஏமனில் உள்ள ராணுவ இலக்குகள் மீது வான்தாக்குதல் தொடுத்து வருகின்றன.

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதீஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் தொடுத்து வருவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா பாதுகாப்பு அரண் அமைத்துள்ளது.

அவ்வகையில் ஹவுதீசின் ஏவுகணையை அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments