குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட 122 கிலோ பேரீச்சம்பழம், 625 கிலோ சிப்ஸ் , உள்ளிட்டவை அழிப்பு

0 755

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கணபதி சிப்ஸ் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட மினரல் ஆயில் தடவப்பட்ட 122 கிலோ பேரீச்சம்பழம், ரசாயன பொடி பயன்படுத்தி தயாரித்த 420 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் தரம் இல்லாத 625 கிலோ சிப்ஸ் ஆகியவற்றை உணவு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

கடை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments