3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

0 839

பிராண பிரதிஷ்டை விழாவின் போது ராமர் சிலைக்கு அபிஷேம் செய்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 22 கலசங்களில் பிரதமர் மோடி புனித நீர் சேகரித்து எடுத்துச் செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் கேலோ இந்தியா போட்டியை வெள்ளியன்று துவக்கி வைக்கிறார்.

மறுநாள் திருச்சி செல்லும் பிரதமர் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்காக திருச்சி கோயில் பிரகாரத்தில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.


திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் புனித நீராடிய பின் 22 கலசங்களில் பிரதமர் தீர்த்தங்களை சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஞாயிறன்று தனுஷ்கோடி கோதண்ட ராமர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின் பிரதமர் டெல்லி திரும்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments