பாட்டி இறந்த தகவல் வந்ததால் விமானத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற விமானி..

0 1059

பாட்னாவில் இருந்து புனேவுக்கு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக தாமதமாகப் புறப்பட தயாராக இருந்துள்ளது.

விமானத்தில் 162 பயணிகள் இருந்த நிலையில், பாட்டியின் இறப்பு குறித்து தகவல் பெற்ற விமானி, விமானத்தை இயக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விமானத்தை மீண்டும் பார்க்கிங் பகுதியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், மதியம் ஒன்றரை மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், வேறொரு விமானி மூலம் சுமார் மூன்று மணி நேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments