வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை - தென்கலையினர் இடையே மோதல்

0 850

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக மோதல் எற்பட்டது.

காஞ்சிபுரம் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் எழுந்தருளினார்.

இந்நிலையில் பார்வேட்டை உற்சவத்தின்போது பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments