திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மைப் பணி மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி

0 808

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீமேட்டழகியசிங்கர் சன்னதி படிக்கட்டுகளை ஆளுநர் ஆர்.என். ரவி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.

பின்னர் பேட்டியளித்த ஆளுநர், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மக்கள் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடே ராமர் மயமாகி இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமது மனைவியுடன் வந்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments