விமானநிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழல், பயணிகள் வெளியேற முயற்சி: மன்னிப்பு கேட்டது இண்டிகோ

0 1115

மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் தாமதம் காரணமாக ஏராளமான பயணிகள் ஏரோ பிரிட்ஜ் எனப்படும் இணைப்பு பாலத்தில் சிக்கிய சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், விமானம் கோவாவில் தாமதமாகவே புறப்பட்டதாகவும் இண்டிகோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சலிப்புற்ற பயணிகள் மும்பைக்கு விமானநிலையத்தில் படிக்கட்டு இணைக்கப்பட்டதும் வேகமாக வெளியேற முயன்றதால், நடைபாலத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வரை விமான நிலைய அதிகாரிகளின் கண்காணிப்பில் பயணிகள் வைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்துக்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments