கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புகையுடன் கூடிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

0 524

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புகையுடன் கூடிய கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக சென்றனர்.

ஒரு சில இடங்களில் கால்நடைகள் சாலையில் நடமாடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments