சென்னை விமான நிலையத்தை சூழ்ந்த கரும்புகை... ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்ட 24 விமானங்கள்..

0 738

போகி கொண்டாட்டத்தால் சென்னை விமான நிலையத்தை சூழ்ந்த புகை மண்டலம் காரணமாக தரை இறங்க இயலாமல் 24 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

சென்னையில் இருந்து புறப்படும் 25 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை சிங்கப்பூரிலிருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மும்பை,டெல்லி, மஸ்கட் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 24 விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments