பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை இன்று தொடங்குகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

0 807

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோங்ஜோம் போர் நினைவிடத்தில் இன்று பகல் 12 மணிக்குத் தொடங்குகிறார்.

கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். இம்பாலில் தொடங்க இருந்த நடைபயணம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலும், நடைபயண வழித்தடத்தில் எந்த மாற்றமும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாளைமுதல் 67 நாள்களில் 15 மாநிலங்கள் வழியாக 6 ஆயிரத்து 713 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து மார்ச் 20-ஆம் தேதி மும்பையை வந்தடைகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments