விருந்தினர்களுக்கு அயோத்தி மண் பரிசாக வழங்கப்படும் - கோயில் நிர்வாகம்

0 737

அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வுக்கு வரும் விருந்தினர்கள் அனைவருக்கும், கோயிலுக்கு அஸ்திவாரம் தோண்டும்போது வெளியே எடுக்கப்பட்ட மண் பரிசாக வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்புவிழா நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விருந்தினராக கலந்துகொள்ள உள்ள பிரதமர் மோடிக்கு, 15 மீட்டர் நீள ராமர் கோயில் படம் சணல் பையில் வைத்து பரிசாக வழங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருந்தினர்களுக்கான பரிசுத் தொகுப்பில், 100 கிராம் எடை உள்ள லட்டு மற்றும் துளசி உள்ள ஒரு பெட்டி, அயோத்தி மண் கொண்ட மற்றொரு பெட்டி, சரயு நதி தீர்த்தம் அடங்கிய பாட்டில், ஆன்மிகப் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments