அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என விதி தீர்மானித்தது - எல்.கே.அத்வானி

0 962

அயோத்தியில் மிகப் பிரம்மாண்ட அளவில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று விதி தீர்மானித்ததாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் அத்வானி.

இந்த நிலையில், ராமர் கோயில் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலை தனது பக்தர் மோடி திறக்க வேண்டும் என்பதை ராமன்தான் முடிவு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் சார்பிலும்தான் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ரத யாத்திரை தொடங்கிய சில நாட்களிலேயே, அது ஒரு மிகப்பெரிய தேசிய இயக்கமாக மாறும் என்று நினைக்கவில்லை என்றும், அதில் தான் ஒரு தேரோட்டி மட்டுமே என்றும் அத்வானி 33 ஆண்டுகளுக்கு முன் தான் தொடங்கிய ரத யாத்திரை குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments