தொகுதிப் பங்கீடு குறித்து இண்டியா கூட்டணியின் தலைவர்கள் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை

0 618

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்க இண்டியா கூட்டணியின் தலைவர்கள் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.

ராகுல்காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையில் கூட்டணிக் கட்சிகளின் பங்கேற்பு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments