இலங்கையில் பருவமழை தீவிரமடைந்ததால் வடகிழக்கு மாகாணத்தில் 70 ஆயிரம் தமிழர்கள் வெள்ளத்தால் பாதிப்பு..

0 565

இலங்கையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திர அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததது.

நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு,  நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை போன்ற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments