பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1010

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன்கொண்டாட ஏதுவாக, 1000 ரூபாய் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகர் நியாய விலை கடையில் ஏராளமான குடும்பத்தலைவிகள் முதலமைச்சரிடம் பொங்கல் தொகுப்புகளைப் பெற்றுச்சென்றனர்.

டோக்கன் கிடைக்கப் பெறாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை காண்பித்து நியாய விலைக்கடைகளில் இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதிவரை பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் பெரியகருப்பன்தெரிவித்துள்ளார்.

அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளதாக குடும்பத்தலைவிகள் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments