இந்தியாவுடன் ஏற்பட்ட விரிசலால் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கு கடும் பாதிப்பு..

0 2731

சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் அனுப்பிவைக்குமாறு சீனஅதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மாலத்தீவு அதிபர் முகமது மூய்சூ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய சீனாவின் உதவியை நாடியுள்ளது மாலத்தீவு அரசு.

சீனாவின் பொருளாதார சிறப்புப் பாதை BRS திட்டத்துக்கு தமது அறிக்கையில் பாராட்டு தெரிவித்த மாலத்தீவு அதிபர், சீனா முக்கியமான கூட்டு நாடு என்று அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments