கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிறுத்தத்தில் ஏடிஎம் மையம் இல்லை என பயணிகள் புகார்

0 1185

சென்னை புறநகரில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு ஏடிஎம் மையம் கூட இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இங்கு கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வசதி, 24மணிநேரமும் தீயணைப்புத்துறை வாகனங்கள் பேருந்து நிலையத்தை சுற்றி நிற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் அவசரத்துக்கு பணம் எடுக்க ஏடிஎம் வசதி இல்லை உணவகங்கள் தேநீர்க்கடைகள் இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments