5 மணிக்கு மேல் போனால் கட்டுக்கட்டாக பணம் அள்ளலாம்! பத்திரப்பதிவுத் துறை பற்றி அண்ணாமலை பரபரப்பு தகவல்!!

0 1388

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

மதுரை பாண்டிகோவிலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த அண்ணாமலை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் போக்குவரத்துத் துறை நிர்மூலமாகி உள்ளதாக கூறினார்.

அலங்காநல்லூருக்கு சம்பந்தமில்லாத ஊராட்சியில் ஜல்லிக்கட்டுக்கு திடல் அமைக்கப்படுவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, அந்தத் திடலுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படுவதாக இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பத்திரப்பதிவுத் துறை தமிழகம் முழுவதும் தரகர்கள் வசம் உள்ளதாகவும், அந்த அலுவலகங்களுக்கு ரெய்டுக்கு சென்றால் கட்டுக்கட்டாக பணம் கிடைக்கும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments