வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கு... வணிகவரித்துறை அதிகாரிகளை கைது செய்த சி.பி.ஐ

0 1197

வரி ஏய்ப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகாருக்கு உள்ளான சோலைராஜ் பேக்கர்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வணிகவரித்துறை அதிகாரிகள் ஆனந்த் மற்றும் முருகானந்தம், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி, அதில் 50 ஆயிரம் ரூபாயை முன்தொகையாக பெற்றதாக கூறப்படுகிறது.

செல்போஃன் உரையாடல் ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, புதுவை வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

இதையடுத்து, வணிகவரித்துறை அதிகாரிகள் ஆனந்த், முருகானந்தம், வரி ஆலோசகர் ராதிகா, நிறுவன உரிமையாளர் சோலைராஜ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments