பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்... 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு, ரூ.1,000 கிடைக்கும்

0 863

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு தொகுப்பு, வருகிற 10ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் நாளை முதல் 9ஆம் தேதி வரையில் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கான ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் சிறப்பு தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பு தொகுப்பு டோக்கன் வாரியாக 13-ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், குறிப்பிட்ட நாளில் பெற முடியாதவர்கள் 14 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments