வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ரயிலுக்கு தீவைப்பு பயணிகள் 5 பேர் உயிரிழப்பு

0 647

வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே கோபிபாக் எனுமிடத்தில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். ஜெஸோர் என்ற இடத்தில் இருந்து டாக்கா சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

எரிந்து கிடக்கும் ரயில்பெட்டிகளில் வேறு உடல்கள் உள்ளனவா என மீட்புப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இது அரசியல் வன்முறைச் செயலா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments