மாமூல் தராத ஆத்திரத்தில் தொழிலதிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி..

0 789

புதுச்சேரியில் மாமூல் தராத தொழிலதிபரை மிரட்டுவதற்காக ரவுடி ஒருவன் நாட்டு வெடி குண்டு வீச முயன்ற போது அது தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அந்த ரவுடி உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

வில்லியனூரை அடுத்த ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் வெங்கடேசனிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுகன் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சுகன் தனது கூட்டாளியுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டியதாகவும், வெங்கடேசன் மீது வீசுவதற்காக நாட்டு வெடிகுண்டை எடுத்த போது தவறுதலாக அது கீழே விழுந்து வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காலில் காயம் அடைந்த ரவுடி சுகனும், அவனது கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments