சோமாலியா அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் சிக்கியுள்ளதாக தகவல்..

0 812

இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த லிலா நார்ஃபோல்க் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கப்பலில் இருந்த பாதுகாப்பு அறையில் தஞ்சமடைந்த மாலுமிகளை தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்ததாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் ஊடுருவியவர்கள் யார் எனத் தெரியாத நிலையில், விமானம் மூலம் கப்பலை தொடர்ந்து காண்காணித்துவருவதாகவும், ஐ.என்.எஸ். சென்னை என்ற போர்கப்பல் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments