கேலோ இந்தியா போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமருக்கு உதயநிதி நேரில் அழைப்பு

0 656

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து சென்னையில் வரும் 19 ஆம் தேதி துவங்க உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கி அவரை விழாவில் பங்கேற்க அழைத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

டெல்லி சென்று திரும்பிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்த போது வெள்ள நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்திருந்தார், அந்த நிதியை விரைந்து வழங்க வேண்டுமெனவும் பிரதமரை வலியுறுத்தியதாக உதயநிதி தெரிவித்தார்.

காங்கிரஸ் ராகுல்காந்தியை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அப்போது, அவர் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்ததாகவும் உதயநிதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments