மேல கைய வைப்பியாடா...தனுஷ் பட விழாவில் அத்துமீறல் கூட்டத்தில் அடி வெளுத்த நடிகை..! ஆங்கிரி பேர்டான ஆங்கரால் பரபரப்பு..

0 3006

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த கேப்டன் மில்லர் படத்தில் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய நடிகை ஒருவரிடம் , கூட்டத்தை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞரை மடக்கிப்பிடித்த அந்த நடிகை அடிவெளுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தனுஷின் கேப்டன் மில்லர் பட அறிமுக நிகழ்ச்சியில் கூட்டத்தை பயன்படுத்தி தன் மீது கைவைத்த இளைஞரை மடக்கிப்பிடித்து நடிகை அடி வெளுத்த காட்சிகள் தான் இவை..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அறிமுக விழா நேட்ரு ஸ்டேடியத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஏராளமாக பங்கேற்றனர்

ஆடல் பாடல் கொண்டாட்டம் என நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது, நிகழ்ச்சி முடிந்து கூட்டத்தினர் மொத்தமாக அரங்கை விட்டு வெளியேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளியுமான ஐஸ்வர்யா என்பவர் மீது கைவைத்து அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்டுகின்றது.

இதையடுத்து அந்த இளைஞரின் கையை மடக்கிப்பிடித்த நடிகை ஐஸ்வர்யா, சிங்கப்பெண்ணாக மாறி ஆவேசமாக அந்த இளைஞரை நையப்புடைத்தார்

மேல கைய வைப்பியாடா ? என்று கேட்டு அவர் அந்த இளைஞரை தாக்கியதால் சுற்றி இருந்தவர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்

இது தொடர்பாக தனது இன்ஸ்டா கிராமில் தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, தன்னை சுற்றி பல நல்ல மனம் உள்ளவர்கள் இருந்ததால் அந்த இளைஞரை தன்னால் பிடித்து அடிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தன்னை சுற்றி வெகு சில மான்ஸ்டர்கள் இருப்பதையும் தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மன்சூரலிகான் பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ், இதே தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடதக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments