சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பி.சி.ஆர். வழக்குக்கு முகாந்திரம் இல்லை: அண்ணாமலை

0 815

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகந்நாதன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சேலத்தில் பேட்டியளித்த அவர், புகார் அளித்தவர்கள் துணை வேந்தரை சந்தித்த வீடியோவை வெளியிட்டார்.

மாணவர் நலனுக்காக துணைவேந்தர் நிறுவனம் துவங்கியதில் தவறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, போலீசார் நடத்திய விதத்தால் துணைவேந்தருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments