கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதி சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை... அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

0 1026

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், அச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஊரப்பாக்கத்திலிருந்து வண்டலூர் மேம்பாலம் வரை சென்று மீண்டும் திரும்புவதால் கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments