மணிப்பூரில் துப்பாக்கியால் சுட்டு 4 பேர் படுகொலை, 5 பேர் படுகாயம்.. 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு..!!

0 943

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தௌபல் மாவட்டத்தில் சீருடை அணிந்த சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு இனக்குழுவினரிடையே மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், தௌபல், இம்பால், பிஷ்னபூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறை பரவுவதைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீடியோ பதிவு மூலமாக வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் பிரேன்சிங், மக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments