மெடிக்கல் உரிமையாளர் கொலை: 3 பேருக்கு மாவுக்கட்டு

0 3752

தாம்பரம் அருகே மருந்துக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேருக்கு காலிலும், ஒருவருக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.

மண்ணிவாக்கத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த வினோத் மாமூல் கொடுக்கவில்லை எனக் கூறி கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.

அந்த கும்பல் அப்பகுதியிலுள்ள பாழடைந்த மண்டபத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தாங்கள் சென்ற போது, சூர்யா, மணிகண்டன் சரத் ஆகியோர் தப்பியோட முயன்று கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மாவுக்கட்டுடன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments