வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

0 1265

திருச்சி அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

தங்கையின் இறப்புக்காக மாரிமுத்து வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது தாய் சாந்தி, மனைவி விஜயலட்சுமி, மகள்கள் பிரதிபா, ஹரிணி ஆகியோர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து அரியமங்கலம் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அவர்களை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. உடல்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments