லண்டனில் தேம்ஸ் நதி வெள்ளத்தால் சுரங்கப் பாதையில் தண்ணீர் புகுந்தது... பிரிட்டனில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரயில் சேவை பாதிப்பு

0 753

பிரிட்டன் நாட்டில் தேம்ஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், சுரங்கப் பாதையில் தண்ணீர் புகுந்ததால், லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவை ஒரு நாள் பாதிக்கப்பட்டது.

இங்கிலிஷ் சேனல் என்ற கடல் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையை கடந்து பிரான்ஸ் செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டி வந்தது. சுரங்கப் பாதையில் புகுந்த தண்ணீரை வெளியேற்றிய பிறகு, ஞாயிறு காலை முதல் ரயில்கள் மீண்டும் புறப்பட்டதாக ரயில் சேவை வழங்கும் ஈரோ-ஸ்டார்நிறுவனம் தெரிவித்தது.

எனினும் பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு புறப்பட்ட மக்களுக்கு பயணம் ஒரு நாள் தாமதம் ஆனதால், புத்தாண்டு தினத்தில் வீடு போய் சேர முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments