எல்லை தாண்டி மிஸோரம் மாநிலத்துக்குள் நுழைந்த 151 மியான்மர் ராணுவத்தினர்... ராணுவ முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயம்

0 571

மியான்மர் நாட்டில் இந்திய எல்லையையொட்டிய பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் அரக்கான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அடுத்து அங்கிருந்த 151 ராணுவத்தினர் எல்லை தாண்டி இந்தியாவின் மிஸோரம் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்துள்ளது குறித்து மியான்மர் அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் தங்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments