ஜன.2ஆம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!

0 767

தமிழ்நாட்டில் ஜன.2ல் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ரூ.1,100 கோடியில் திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சேலம் - மேட்டூர் இடையே 41 கி.மீ. தூர இரட்டை ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

திருச்சி - விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை - திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார்

39 கிலோ மீட்டர் தூர திருச்சி - கல்லகம் 4 வழிச்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்

செட்டிக்குளம் - நத்தம் 4 வழிச்சாலை, காரைக்குடி - ராமநாதபுரம் இருவழிச்சாலையும் திறக்கப்படுகிறது

44 கிலோ மீட்டர் தூர சேலம் - வாணியம்பாடி 4 வழிச்சாலையையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

முங்கையூர் - மரக்காணம் 4 வழிச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் 488 கி.மீ. நீள இயற்கை எரிவாயு குழாயை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments