டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 5 ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரிப்பு.. 2022-23ல் ரூ.139 லட்சம் கோடி அளவுக்குப் பணப்பரிவர்த்தனை - ஆர்பிஐ

0 516

கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்டவை மூலமான மின்னணு யுபிஐ பணப்பரிவர்த்தனை கடந்த ஐந்து ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2017-18-ஆம் ஆண்டில் 92 கோடியாக இருந்த பணப் பரிவர்த்தனை, 2022-23-ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 375 கோடியாக அதிகரித்துள்ளது.

2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில் யுபிஐ மூலம் மட்டும் 62 சதவீதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2017-18-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில், 2022-23-ஆம் ஆண்டில் 168 சதவீதம் அதிகரித்து 139 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சென்டிவ் உள்ளிட்ட சலுகைகளால் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments