புதுக்கோட்டையில் சிமெண்ட் பாரம் ஏற்றிய வந்த லாரி டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

0 950

புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த அந்த லாரி, ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது டீக்கடைக்கு அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதும் லாரி மோதியதில் அவற்றில் இருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி ஒருவர் உட்பட 19 பேர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments