உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வலியுறுத்தல்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

0 1027

நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களை ஊக்குவிக்க பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

டெல்லி ஐ.எல்.பி.எஸ் மருத்துவக் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், சரியான வாய்ப்பு கிடைத்தால் ஆண்களைவிட சிறப்பான வெற்றியைப் பெண்களால் பெற முடியும் என்பதற்கு பட்டம் பெற்ற 65 பேரில் 37 பேர் பெண்கள் என்பதே எடுத்துக்காட்டு என்றார்.

மருத்துவச் சிகிச்சைகளுக்கான கட்டணம் குறைவாக உள்ளதால் மருத்துவ சுற்றுலாவில் பிற நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments