தமது இரண்டாவது கட்ட நடைபயணத்தை ஜன.14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்குகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

0 787

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமது இரண்டாவது கட்ட நடைபயணத்தை ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்க உள்ளார்.

மும்பையில் மார்ச் 20-ஆம் தேதி முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நடைபயணத்துக்கு பாரத் நியாய் யாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

நடைபயணத்தை, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கிவைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் இருந்து அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார், ஒடிஸா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை 65 நாட்களில் சுமார் 6 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்துக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments