காஞ்சிபுரத்தில் ரவுடி பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

0 1133

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் அருகே ரவுடி பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடிகள் இருவர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரவணன் என்கிற பிரபாகரன் நேற்று பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் தனிப்படையினர் குற்றாவளிகளை தேடிய நிலையில், ரகு, கருப்பு ஆசான் ஆகியோர் பொன்னேரிக்கரை புதிய ரயில்வே பாலம் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் அங்கு சென்றபோது, பதுங்கியிருந்த இருவரும், அரிவாளால் தாக்கியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் சசிகுமார் காயமடைந்தனர்.

போலீசார் அவர்களை சரண் அடையச்சொல்லி எச்சரித்த போதும் தாக்குதலை நிறுத்தவில்லை என்பதால், தனது குழுவை பாதுகாக்க உதவி ஆய்வாளர் சுதாகர் இருவரை நோக்கி சுட்டதாகவும் இதில் காயமடைந்தவர்களை காஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இருவரும் உயிர் இழந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த காவல்துறையினர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments