டெல்லி உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம்... வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை

0 483

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்றுமாலை வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மோப்ப நாய்களுடன் சோதனையிட்ட போலீசார், தூதருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக, தூதரகத்திற்கு தொலைபேசி மூலம் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு நிபுணர்கள் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படும் இடத்தை சோதனையிட்டு வெடிகுண்டுகள் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்தனர். அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ரசாயனம் மூலம் வெடிப்பு நடத்தப்பட்டதா என்பது குறித்த விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments