மேற்குவங்கத்தில் 35 தொகுதிகளை வென்று வாகை சூடுவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஜே.பி.நட்டா ஆலோசனை

0 1043

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்கொள்வது  குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கொல்கத்தாவில் ஆலோசனை மேற்கொண்டனர்.

மக்களவைத் தேர்தலில் 50 சதவீத வாக்குகளுடன் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்நிலையில், கொல்கத்தா வந்த அமித் ஷாவும் நட்டாவும் மாநிலத்தின் பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 35 தொகுதிகளை குறிப்பிட்டு வெற்றிபெறுவதற்கான வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments