உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இம்பால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

0 560

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இம்பால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொண்டு அழிக்கும் இம்பால் போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மகாராஷ்ட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கடற்படைத் தளபதி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

இதுகுறித்து தமது எக்ஸ் பதிவில் பெருமிதம் வெளியிட்ட பிரதமர் மோடி , இந்தியாவின் தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியையும், இந்திய கடற்படையின் ஆற்றலையும் இந்நிகழ்வு பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவுக்கு இது பெருமையான தருணம் என்றும் கடல்பாதுகாப்பை பலப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments