வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே ரூ.6,000 நிவாரணம்.. குறைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
வெள்ள சேதத்தை பாதிக்கப்பட்ட பகுதி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என பிரித்து மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படுவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ளத்தால் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கொக்குகுளம், சாயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர், தென்காசி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 77 ஹெக்டேரில் நெல், மக்காசோளம், பாசிப்பயறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு வழங்க 16 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
Comments