டெல்லியில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகப் பதிவு.. கடும் மூடுபனியால் விமானம் மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்பு

0 585

இந்தியாவின் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து கடுமையான குளிர் நிலவுகிறது.

குறிப்பாக, டெல்லியில் இரண்டாவது நாளாக கடுமையான மூடுபனி நிலவுவதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

கடும் மூடுபனியால் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

சில விமானங்கள் டெல்லியில் தரையிறங்க முடியாமல் ஜெய்ப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

கடும் மூடுபனி காரணமாக பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இம்மாதம் இறுதி வரை மூடுபனி நிலவும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments